search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி மரணம்
    X
    விவசாயி மரணம்

    திருவண்ணாமலையில் மண்சரிந்து கிணற்றில் விழுந்து விவசாயி பலி

    திருவண்ணாமலையில் மண்சரிந்து கிணற்றில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அடுத்த பூதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (35), விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு அந்த பகுதியில் கிணற்றுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அவர் கிணற்றின் அருகில் செல்லும்போது தொடர் மழையின் காரணமாக கிணற்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணாமலை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் கிணற்றில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அண்ணாமலையின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×