என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் மண்சரிந்து கிணற்றில் விழுந்து விவசாயி பலி
Byமாலை மலர்19 Aug 2019 5:11 AM GMT (Updated: 19 Aug 2019 5:11 AM GMT)
திருவண்ணாமலையில் மண்சரிந்து கிணற்றில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த பூதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (35), விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு அந்த பகுதியில் கிணற்றுடன் கூடிய விவசாய நிலம் உள்ளது. நேற்று தனது விவசாய நிலத்திற்கு சென்றார். அவர் கிணற்றின் அருகில் செல்லும்போது தொடர் மழையின் காரணமாக கிணற்றில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணாமலை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் கிணற்றில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அண்ணாமலையின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X