என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி
Byமாலை மலர்17 Aug 2019 4:56 AM GMT (Updated: 17 Aug 2019 4:56 AM GMT)
கேரளாவுக்கு நிவாரண பொருள் அனுப்பிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
கேரள மாநிலத்தில், தென் மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 14-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில், ரூ.82 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இந்த பொருட்கள் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அதை அனுப்பி வைத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களை லாரிகளில் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றி.
இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில், தென் மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும்படி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கடந்த 14-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில், ரூ.82 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இந்த பொருட்கள் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அதை அனுப்பி வைத்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண பொருட்களை லாரிகளில் அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு நன்றி.
இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X