என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நானும் ரஜினி ரசிகன் தான்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
Byமாலை மலர்15 Aug 2019 6:57 AM GMT (Updated: 15 Aug 2019 6:57 AM GMT)
நானும் ரஜினி ரசிகன்தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ரஜினி மட்டுமே தகுதியானவர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
சென்னை:
பழம்பெரும் கதாசிரியரான கலைஞானத்துக்கு சென்னையில் நேற்று மாலை பாராட்டு விழா நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாடகை வீட்டில் இருக்கும் கலைஞானத்துக்கு புதிய வீட்டை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் ரஜினி தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, ரஜினியை பாராட்டி பேசினார். அவரது பேச்சு வருமாறு:-
கலைஞானத்துக்கு, இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்துவது பாராட்டுக்குரியது. மற்றவர்களை பாராட்டுவதற்கு நல்ல மனம் வேண்டும்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திரைத்துறையில் இருந்து முதல்-அமைச்சர் ஆகிவிட்ட பிறகு ரஜினி படங்கள் நிறைய வெளிவந்தன. அவரது எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். நானும் ரஜினி ரசிகன்தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ரஜினி மட்டுமே தகுதியானவர்.
என்றைக்கும் அவர்தான் சூப்பர் ஸ்டார். எதற்கும் ஒரு ராசி வேண்டும். அந்த ராசிக்கு சொந்தக்காரர் கலைஞானம். தமிழ் திரை உலகின் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை அம்மாவின் அரசு நிறைவேற்றி தரும். திரை உலகை நாங்கள் கைவிடமாட் டோம். ஏனென்றால் புரட்சி தலைவர், அம்மா என அவர்கள் வழி வந்த அரசு தான் இந்த அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.
பழம்பெரும் கதாசிரியரான கலைஞானத்துக்கு சென்னையில் நேற்று மாலை பாராட்டு விழா நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாடகை வீட்டில் இருக்கும் கலைஞானத்துக்கு புதிய வீட்டை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் ரஜினி தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, ரஜினியை பாராட்டி பேசினார். அவரது பேச்சு வருமாறு:-
கலைஞானத்துக்கு, இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்துவது பாராட்டுக்குரியது. மற்றவர்களை பாராட்டுவதற்கு நல்ல மனம் வேண்டும்.
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திரைத்துறையில் இருந்து முதல்-அமைச்சர் ஆகிவிட்ட பிறகு ரஜினி படங்கள் நிறைய வெளிவந்தன. அவரது எல்லா படங்களையும் பார்த்துள்ளேன். நானும் ரஜினி ரசிகன்தான் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ரஜினி மட்டுமே தகுதியானவர்.
என்றைக்கும் அவர்தான் சூப்பர் ஸ்டார். எதற்கும் ஒரு ராசி வேண்டும். அந்த ராசிக்கு சொந்தக்காரர் கலைஞானம். தமிழ் திரை உலகின் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை அம்மாவின் அரசு நிறைவேற்றி தரும். திரை உலகை நாங்கள் கைவிடமாட் டோம். ஏனென்றால் புரட்சி தலைவர், அம்மா என அவர்கள் வழி வந்த அரசு தான் இந்த அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X