என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது
Byமாலை மலர்4 Aug 2019 5:05 PM GMT (Updated: 4 Aug 2019 5:05 PM GMT)
சங்கரன்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மனைவி பிரேமா (வயது30). அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (27), தொழிலாளி. சம்பவத்தன்று பிரேமாவும், செல்வகுமாரும் பேசி கொண்டிருந்தனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு வீட்டுக்குள் புகுந்து பிரேமாவிடம், செல்வகுமார் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வந்தனர். ஆனால் செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X