என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
Byமாலை மலர்3 Aug 2019 6:32 AM GMT (Updated: 3 Aug 2019 6:32 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை கிராமம் அருகே கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது.
இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார்கள்.
நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்து கடப்பாரையால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்து உள்ளனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த அலாரம் ஒலித்தது. பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது. இந்த சம்பவம் குறித்து சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை கிராமம் அருகே கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது.
இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார்கள்.
நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்து கடப்பாரையால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்து உள்ளனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த அலாரம் ஒலித்தது. பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது. இந்த சம்பவம் குறித்து சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X