என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே வறுமையால் கணவன்- மனைவி தற்கொலை
Byமாலை மலர்2 Aug 2019 8:30 AM GMT (Updated: 2 Aug 2019 8:30 AM GMT)
பெரம்பலூர் அருகே குடும்ப வறுமையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் ராமகிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது வீட்டிற்குள் ராமகிருஷ்ணன், ரேவதி ஆகியோர் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கணவன்-மனைவி இருவரும் எப்படி இறந்தனர் என்று விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லாததால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர்.
மேலும் ராமகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேவதி அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமகிருஷ்ணன் அவ்வப்போது குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அவர்களது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இருவரும் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 35), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் ராமகிருஷ்ணன் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது வீட்டிற்குள் ராமகிருஷ்ணன், ரேவதி ஆகியோர் தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து உடனடியாக மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கணவன்-மனைவி இருவரும் எப்படி இறந்தனர் என்று விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லாததால் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர்.
மேலும் ராமகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேவதி அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு ராமகிருஷ்ணன் அவ்வப்போது குடிபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் அவர்களது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இருவரும் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X