என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டையில் மாணவனை கொன்ற அண்ணன் கைது- பரபரப்பு தகவல்கள்
Byமாலை மலர்1 Aug 2019 5:13 AM GMT (Updated: 1 Aug 2019 5:13 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 10-ம் வகுப்பு பள்ளி மாணவனை கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி.
இவர்களது மூத்த மகன் சரத்குமார் (வயது 21). கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தார். இளைய மகன் சிவக்குமார் (வயது 15). இவர் எலவனாசூர் கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் அந்த பகுதியில் உள்ள காப்புக்காடு வனப்பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
மர்ம மனிதர்கள் யாராவது மாணவன் சிவக்குமாரை கொன்று காட்டில் வீசிசென்றார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
கொலை நடந்த இடத்தில் இருந்து சென்ற மோப்ப நாய் ராக்கி நேராக சிவக்குமாரின் வீட்டில் வந்து நின்றது. எனவே சிவக்குமாரின் தாய் பராசக்தி, அண்ணன் சரத்குமார், பாட்டி பாலாயி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் இருந்த ஒரு கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.
எனவே மாணவனின் வீட்டில் உள்ளவர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் உறுதி செய்தனர். அதன்படி அங்கு முகாமிட்ட தனிப்படை போலீசார் அந்த குடும்பத்தினரின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மாணவனின் சகோதரர் சரத்குமார் மீது சந்தேகம் மேலும் வலுத்தது.
உடனே சரத்குமாரை தனிப்படை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சரத்குமாருக்கும், அவரது தம்பி சிவக்குமாருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்படி சம்பவத்தன்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே சிவக்குமாரை தீர்த்துக்கட்ட சரத்குமார் முடிவு செய்தார்.
சிவக்குமாருக்கு முயல் வேட்டையில் அதிக ஆர்வம் உண்டு. ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறைநாள் என்பதால் சிவக்குமார் வீட்டில் இருந்தார்.
சிவக்குமாரை கொலை செய்ய இதுதான் தக்க சமயம் என்று சரத்குமார் தீர்மானித்தார். பின்னர் தனது தம்பி சிவக்குமாரிடம், வா நாம் முயல் வேட்டைக்கு செல்வோம் என்று கூறினார். அண்ணனின் நயவஞ்சகத்தை அறியாத தம்பி சிவக்குமார் முயல் வேட்டைக்கு சென்றார்.
காப்புகாடு பகுதியில் அடர்ந்த புதர் மண்டி கிடக்கும் பாறை இடுக்கு இடையே சிவக்குமாரை முயலை பிடிக்க கண்ணி வைக்குமாறு சரத்குமார் கூறினார். உடனே சிவக்குமார் கீழே இறங்கி கண்ணி வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சரத்குமார் தனது தம்பி என்று கூட பாராமல் பட்டாக்கத்தியால் சரமாரியாக சிவக்குமாரை வெட்டினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் பிணமானார். பின்னர் சரத்குமார் வீட்டுக்கு வந்து விட்டார்.
சிவக்குமாரை காணவில்லையே என்று தாய் பராசக்தி கேட்டதற்கு, அவன் முயல்வேட்டைக்கு சென்று உள்ளான் என்று கூறி உள்ளார். பின்னர் உறவினர்களுடன் சென்று எதுவும் தெரியாதது போல் ஆட்களுடன் தேடி உள்ளார்.
காட்டு பகுதியில் சிவகுமாரின் உடலை பார்த்து சந்தேகம் வராதபடி தனது தாயாருடன் கதறி அழுது துடித்து உள்ளார். ஆனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் சரத்குமார் சிக்கி கொண்டார்.
மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பராசக்தி.
இவர்களது மூத்த மகன் சரத்குமார் (வயது 21). கரும்பு வெட்டும் தொழில் செய்து வந்தார். இளைய மகன் சிவக்குமார் (வயது 15). இவர் எலவனாசூர் கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் அந்த பகுதியில் உள்ள காப்புக்காடு வனப்பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து எலவனாசூர் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
மர்ம மனிதர்கள் யாராவது மாணவன் சிவக்குமாரை கொன்று காட்டில் வீசிசென்றார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
கொலை நடந்த இடத்தில் இருந்து சென்ற மோப்ப நாய் ராக்கி நேராக சிவக்குமாரின் வீட்டில் வந்து நின்றது. எனவே சிவக்குமாரின் தாய் பராசக்தி, அண்ணன் சரத்குமார், பாட்டி பாலாயி உள்ளிட்ட 8 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் இருந்த ஒரு கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.
எனவே மாணவனின் வீட்டில் உள்ளவர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் உறுதி செய்தனர். அதன்படி அங்கு முகாமிட்ட தனிப்படை போலீசார் அந்த குடும்பத்தினரின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மாணவனின் சகோதரர் சரத்குமார் மீது சந்தேகம் மேலும் வலுத்தது.
உடனே சரத்குமாரை தனிப்படை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சரத்குமாருக்கும், அவரது தம்பி சிவக்குமாருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்படி சம்பவத்தன்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே சிவக்குமாரை தீர்த்துக்கட்ட சரத்குமார் முடிவு செய்தார்.
சிவக்குமாருக்கு முயல் வேட்டையில் அதிக ஆர்வம் உண்டு. ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறைநாள் என்பதால் சிவக்குமார் வீட்டில் இருந்தார்.
சிவக்குமாரை கொலை செய்ய இதுதான் தக்க சமயம் என்று சரத்குமார் தீர்மானித்தார். பின்னர் தனது தம்பி சிவக்குமாரிடம், வா நாம் முயல் வேட்டைக்கு செல்வோம் என்று கூறினார். அண்ணனின் நயவஞ்சகத்தை அறியாத தம்பி சிவக்குமார் முயல் வேட்டைக்கு சென்றார்.
காப்புகாடு பகுதியில் அடர்ந்த புதர் மண்டி கிடக்கும் பாறை இடுக்கு இடையே சிவக்குமாரை முயலை பிடிக்க கண்ணி வைக்குமாறு சரத்குமார் கூறினார். உடனே சிவக்குமார் கீழே இறங்கி கண்ணி வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சரத்குமார் தனது தம்பி என்று கூட பாராமல் பட்டாக்கத்தியால் சரமாரியாக சிவக்குமாரை வெட்டினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் பிணமானார். பின்னர் சரத்குமார் வீட்டுக்கு வந்து விட்டார்.
சிவக்குமாரை காணவில்லையே என்று தாய் பராசக்தி கேட்டதற்கு, அவன் முயல்வேட்டைக்கு சென்று உள்ளான் என்று கூறி உள்ளார். பின்னர் உறவினர்களுடன் சென்று எதுவும் தெரியாதது போல் ஆட்களுடன் தேடி உள்ளார்.
காட்டு பகுதியில் சிவகுமாரின் உடலை பார்த்து சந்தேகம் வராதபடி தனது தாயாருடன் கதறி அழுது துடித்து உள்ளார். ஆனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் சரத்குமார் சிக்கி கொண்டார்.
மேற்கண்டவை விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X