search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பல்லடத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

    பல்லடத்தில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள செம்பிபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் சக்திவேல். சிறு விசைத்தறி உரிமையாளர். இவரது மகன் சஞ்சீவ் (14). இவன் பெரும்பாளியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு வரை படித்தான்.

    பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்தான். ஒரு மாதம் வரை தான் அப்பள்ளிக்கு சென்று வந்தான். அங்கு பிடிக்கவில்லை என கூறி மீண்டும் பெரும்பாளியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்ந்தான்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து சஞ்சீவ் வீட்டிற்கு வந்தான். அப்போது வீட்டில் யாரும் இல்லை. சஞ்சீவ் தந்தை சக்திவேல் பக்கத்தில் உள்ள தனது தறி கூடத்திற்கு சென்று இருந்தார்.

    திடீரென சஞ்சீவ் வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டி கொண்டு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். தனது தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டு வீடு திரும்பிய சஞ்சீவ் தாய் திலகா வீட்டின் அறை கதவு உள் பக்கம் பூட்டி இருப்பதையும் சஞ்சீவை காணாததையும் கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து அருகில் தறி பட்டறைக்கு சென்று கணவர் சக்திவேலிடம் தெரிவித்தார். உடனே அவர் அங்கு விரைந்து வந்தார். வீட்டின் கதவு பூட்டை உடைத்து பார்த்த போது சஞ்சீவ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சஞ்சீவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சஞ்சீவ் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×