search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காதல் திருமணம் செய்த புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

    டிக்-டாக், பேஸ்புக்கில் கணவர் மூழ்கியதால் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவினாசி:

    திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 25). கட்டிடத்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி (18) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

    பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்று அஞ்சிய காதல் தம்பதி ஊரை விட்டு வெளியேறி திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வந்தனர். இங்குள்ள ஆட்டையாம்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து 4 மாதங்களாக வசித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சக்திவேல் செல்போனில் பேஸ்புக், டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைதளத்தை பார்த்து பொழுதை போக்கி வந்தார். காதலித்தபோது இருந்த, காதல், அன்பு, பாசம் தற்போது சக்திவேலிடம் இல்லை என்று ரேணுகாதேவி கூறி வந்தார்.

    இதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் சக்திவேல் போனை மணிக்கணக்கில் பார்த்து வந்தார். இது குறித்து ரேணுகாதேவி வாக்குவாதம் செய்தார். ஆனால் சமூக வலைதளத்தில் மூழ்கியிருந்த அவர் திரும்பவில்லை.

    இதனால் விரக்தியடைந்த ரேணுகாதேவி வீட்டில் இருந்து டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென பற்றி எரிந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ரேணுகாதேவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காதல் திருமணம் செய்த சக்திவேல் எந்த நேரமும் செல்போனில் மூழ்கி இருந்ததால் ரேணுகாதேவி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    Next Story
    ×