search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவர வரைபடம்
    X
    வானிலை நிலவர வரைபடம்

    தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

    தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவு நேரத்திலோ நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழக கடற்கரை மாவட்டங்களில் மேற்கு, தென்மேற்கு திசையில் இருந்து அவ்வபோது 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசக் கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 7 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாரில் 6 செ.மீ மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×