search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் 17 வயது இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை- பனியன் தொழிலாளி கைது

    திருப்பூரில் திருமண ஆசை வார்த்தை கூறி 17 வயது இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் டி.எம்.எஸ். நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டில் இருந்து மாயமானார்.

    இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் அப்பெண் மீட்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கடத்தப்பட்ட இளம்பெண்ணுக்கும் அவரது உறவினர் முத்தூர் மோட்டாங்காட்டை சேர்ந்த பனியன் தொழிலாளி அய்புதீன் (22) என்பவருக்கு ம் பழக்கம் இருந்தது தெரிய வந்தது.

    அவர் திருமண ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் அய்புதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×