search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கல்லூரி மாணவரை எரித்துக் கொல்ல முயற்சி - தாயார் கைது

    மதுரை அருகே பணம் கேட்டு தொந்தரவு செய்த கல்லூரி மாணவரை எரித்துக் கொல்ல முயன்ற தாயாரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமோகூர் காளிகாப்பான் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிக்காளை. இவரது மனைவி சரோஜா (வயது 50). இவர்களது மகன் அஜித்குமார் (21). மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் அஜித்குமார் 3-ம் ஆண்டு பி.காம். படித்து வருகிறார்.

    அடிக்கடி தனது தாயார் சரோஜாவிடம் பணம் கேட்டு அஜித்குமார் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    கடந்த 4 மாதத்துக்கு முன்பு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு அஜித்குமார் தொந்தரவு செய்ததால் சரோஜா கடும் ஆத்திரம் அடைந்தார்.

    நேற்று மதியம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமார் மீது சரோஜா மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார்.

    அலறியபடி வீட்டை விட்டு ஓடிய அஜித்குமாருக்கு உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அஜித்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மகனை எரித்துக் கொல்ல முயன்ற சரோஜாவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×