என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல்லில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 2 பேர் போக்சோவில் கைது
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இந்த சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை உணர்ந்த பெற்றோர் அவரை மருத்துவர்களிடம் காண்பிப்பதற்காக திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அந்த சிறுமியை பரிசோதித்தனர்.
அப்போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் சிறுமலை பழையூரைச் சேர்ந்த மணி (23), சின்னத்தம்பி (43) ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குபதிவு செய்து மணி, சின்னத்தம்பி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்