என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மணவாளநகரில் 2 வீடுகளில் புகுந்து ரூ.10 லட்சம்-நகை கொள்ளை
சென்னை, ஜூலை. 19-
திருவள்ளூரை அடுத்த மண வாளநகர், கே.கே. நகரைச் சேர்ந்தவர் குமரவேல். மேல்நல்லாத்தூரில் உள்ள கார் தொழிற் சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர் வீட் டின் கீழ் உள்ள அறையில் குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் வெளிப்புற படிக்கட்டு வழியாக கதவை உடைத்து மாடியில் உள்ள அறைக்குள் புகுந்தனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளிப் பொருட்கள், செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி தப்பி சென்று விட்டனர். அதிகாலையில் குமரவேல் எழுந்தபோது தான் வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
குமரவேல் தனது மகளை பல் மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக ரூ.7 லட்சத்தை வைத்து இருந்தார். அதனை கொள்ளை கும்பல் சுருட்டி சென்று விட்டனர்.
இதே போல் அருகில் உள்ள ஓட்டல் உரிமையாளர் லோகேஷ் என்பவரது வீட்டுக்குள்ளும் மாடி வழியாக கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்தனர்.
பீரோவை உடைத்து ரூ.3 லட்சம், 10 பவுன்நகை, ½ கிலோ வெள்ளிப் பொருட் களை அள்ளி தப்பினர்.
லோகேஷ் மற்றொரு அறையில் தூங்கியதால் கொள்ளையர்கள் வீட்டுக் குள் புகுந்தது அவருக்கு தெரியவில்லை. காலையில் எழுந்த பின்னரே அவருக்கும் வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. இவரது வீட்டிலும் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி இருந்தனர்.
இதுகுறித்து மணவாள நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் விரைந்து வந்து விசா ரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த 2 வீடுகளிலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்ததால் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்வ தில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே அடுத்தடுத்து 2 வீடு களில் கொள்ளை நடந்த சம்பவம் மணவாள நகர் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்