என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்
Byமாலை மலர்19 July 2019 8:02 AM GMT (Updated: 19 July 2019 8:02 AM GMT)
கோவையில் மழைநீர் தேங்கிய சாக்கடையை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுத்தம் செய்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
கோவை:
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது.
கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் கோவை ரெயில் நிலையம் பகுதியில் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடையுடன் கலந்த மழைநீர் அருகில் உள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அப்போது அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோர் உடனடியாக பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரை அப்புறப்படுத்த சாக்கடையை சுத்தம் செய்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் கொட்டும் மழையிலும் அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலையில் தண்ணீர் குறைந்து போக்குவரத்து சீரானது.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சாக்கடையை சுத்தம் செய்து தண்ணீர் செல்ல வகை செய்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோரை பாராட்டினர்.
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது.
கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் கோவை ரெயில் நிலையம் பகுதியில் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடையுடன் கலந்த மழைநீர் அருகில் உள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
அப்போது அங்கு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோர் உடனடியாக பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரை அப்புறப்படுத்த சாக்கடையை சுத்தம் செய்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் கொட்டும் மழையிலும் அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலையில் தண்ணீர் குறைந்து போக்குவரத்து சீரானது.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சாக்கடையை சுத்தம் செய்து தண்ணீர் செல்ல வகை செய்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோரை பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X