என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுசீந்திரம் அருகே அண்ணன் முறை உறவினருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
என்.ஜி.ஓ.காலனி:
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
காதல் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது. காதல் திருமணம் செய்த வாலிபருடன் அவரது சகோதரி நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தார்.
சமீபத்தில் அந்த சகோதரி, வாலிபரை சந்தித்து உறவை புதுப்பித்து கொண்டார். இதையடுத்து காதல் தம்பதியை தன் வீட்டிற்கு விருந்திற்கு வருமாறு அழைத்தார்.
சகோதரியின் அழைப்பை ஏற்று வாலிபர் தன் மனைவியுடன் அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்கள் தங்கி விருந்துண்டு மகிழ்ந்தனர். அப்போது சகோதரியின் கணவர், வாலிபரின் மனைவியுடன் அன்பாக பேசிக்கொண்டிருந்தார்.
உறவு முறையில் அவர்கள் அண்ணன்- தங்கை என்பதால் இதனை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இருவரும் எல்லை மீறிய பழக்கத்தில் ஈடுபட்டனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சகோதரனை விருந்துக்கு அழைத்து, அவரது மனைவியுடன் தன் கணவருக்கு கள்ள தொடர்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அந்த பெண் அதிர்ந்து போனார். அவர் உடனே தன் குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.
சகோதரியின் குடும்பம் சிதைந்ததுக்கு தன் மனைவி தான் காரணம் என்பதை அறிந்த வாலிபர், மனைவியை கண்டித்தார். அதை மனைவி கேட்கவில்லை.
கணவரை பிரிந்த காதல் மனைவி, அண்ணன் உறவு முறை வாலிபருடன் சென்று அவருடனேயே தங்க தொடங்கினார். இது பற்றி பெண்ணின் கணவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவி, அண்ணன் உறவு முறை வாலிபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு உள்ளார்.
அவர்களின் காதலுக்கு இடையூறாக இருப்பதால் எங்கள் குழந்தைகளை அவர்கள் துன்புறுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்காக நேற்று மகளிர் போலீசார், கள்ளக்காதலர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவர்களை பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த பெண், தனக்கு காதல் கணவர் வேண்டாம். கள்ளக்காதலனே போதும் என்று கூறினார். போலீசார் எவ்வளவோ அறிவுரை கூறியும் அதை ஏற்க அந்த பெண் மறுத்துவிட்டார்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்