search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட திருநங்கை அபிராமி.
    X
    கொலை செய்யப்பட்ட திருநங்கை அபிராமி.

    விழுப்புரம் அருகே தலையில் கல்லை போட்டு திருநங்கை கொலை

    விழுப்புரம் அருகே இன்று அதிகாலை தலையில் கல்லை போட்டு திருங்கை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அடுத்த ஐயங்கோவில்பட்டு கிராமத்தில் வசித்தவர் அபிராமி என்கின்ற அன்பு (வயது 36) திருநங்கை.

    இவர் இன்று அதிகாலை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தாம்பாளையம் அருகே தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அந்த பகுதியில் உள்ளவர்கள் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அபிராமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம் டி.எஸ்.பி திருமால், விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

    காரில் வந்த மர்மநபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அபிராமி உடன் இருந்த திருநங்கைகள் தெரிவித்தனர்.

    கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×