என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே தலையில் கல்லை போட்டு திருநங்கை கொலை
Byமாலை மலர்17 July 2019 5:18 AM GMT (Updated: 17 July 2019 5:18 AM GMT)
விழுப்புரம் அருகே இன்று அதிகாலை தலையில் கல்லை போட்டு திருங்கை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த ஐயங்கோவில்பட்டு கிராமத்தில் வசித்தவர் அபிராமி என்கின்ற அன்பு (வயது 36) திருநங்கை.
இவர் இன்று அதிகாலை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தாம்பாளையம் அருகே தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அந்த பகுதியில் உள்ளவர்கள் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அபிராமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் டி.எஸ்.பி திருமால், விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
காரில் வந்த மர்மநபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அபிராமி உடன் இருந்த திருநங்கைகள் தெரிவித்தனர்.
கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
விழுப்புரம் அடுத்த ஐயங்கோவில்பட்டு கிராமத்தில் வசித்தவர் அபிராமி என்கின்ற அன்பு (வயது 36) திருநங்கை.
இவர் இன்று அதிகாலை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தாம்பாளையம் அருகே தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அந்த பகுதியில் உள்ளவர்கள் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அபிராமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் டி.எஸ்.பி திருமால், விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
காரில் வந்த மர்மநபர்கள் அபிராமியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அபிராமி உடன் இருந்த திருநங்கைகள் தெரிவித்தனர்.
கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X