search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    திருமுல்லைவாயலில் என்ஜினீயர் வீட்டில் 80 பவுன் கொள்ளை

    திருமுல்லைவாயலில் என்ஜினீயர் வீட்டில் 80 பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயில் கமலம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் பெங்களூரில் ரெயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

    விடுமுறையையொட்டி தட்சிணாமூர்த்தி திருமுல்லைவாயலுக்கு வந்தார். அவர் குடும்பத்தோடு தி.நகர் கடை வீதிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 80 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×