search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரத்த வெள்ளத்தில் பிரபு பிணமாக கிடக்கும் காட்சி. உள்படம் (பிரபு)
    X
    ரத்த வெள்ளத்தில் பிரபு பிணமாக கிடக்கும் காட்சி. உள்படம் (பிரபு)

    மனைவியுடன் கள்ளக்காதல் பெயிண்டரை கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர் கைது

    நத்தத்தில் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டவரை கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 32). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த வி‌ஷயம் சண்முகத்துக்கு தெரிய வந்ததால் ஆத்திரமடைந்தார். பிரபுவிடம் தனது மனைவியுடன் பழக கூடாது என கண்டித்துள்ளார். ஆனால் இதனை மீறி பிரபு சண்முகத்தின் மனைவியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

    இது சண்முகத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. நேற்று பிரபு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற சண்முகம், பிரபுவின் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் சண்முகம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×