search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரி சக்கரத்தில் சிக்கி 10 மாத ஆண் குழந்தை பலி

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று காலை மினி லாரி சக்கரத்தில் சிக்கி 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு பிரவின் என்ற 10 மாத கைக்குழந்தை இருந்தது.

    இன்று காலை வீட்டின் அருகில் மினிலாரி ஒன்று நின்றது. அப்போது ராஜாவின் குழந்தை அந்த மினிலாரியின் அடியில் விளையாடி கொண்டு இருந்தது. இதை அறியாத அந்த பகுதியை சேர்ந்த டிரைவர் விஜய் மினி லாரியை எடுத்தார். இதில் மினிலாரியின் சக்கரம் குழந்தை மீது ஏறியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த விபத்து குறித்து எடைக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×