என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடிபோதையில் தகராறு - கணவனை ஊதுகுழலால் அடித்து கொன்ற மனைவி
வடமதுரை:
திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது42). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 3 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கல் உடைக்கும் தொழிலாளியான முருகேசன் கல்பட்டிசத்திரம் அருகே வத்தமணியகாரன்பட்டியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவு குடிபோதையில் வந்த முருகேசன் பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்துள்ளார். மேலும் தனது மகளை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சவர்ணம் முருகேசனை அருகில் இருந்த ஊதுகுழலால் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் நிலைதடுமாறி முருகேசன் சரிந்து விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முருகேசன் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனை கொலை செய்த பஞ்சவர்ணத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்