என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே திருமண ஆசை காட்டி பெண்ணை கர்ப்பமாக்கிய காங்கிரஸ் நிர்வாகி
Byமாலை மலர்3 July 2019 12:13 PM GMT (Updated: 3 July 2019 12:13 PM GMT)
வில்லியனூர் அருகே திருமண ஆசைகாட்டி பெண்ணை கர்ப்பமாக்கிய காங்கிரஸ் நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள சிவராந்தகம் பேட்டையை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 27). பி.டெக். பட்டதாரி.
இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் நெருங்கி பழகி வந்ததால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். வீட்டுக்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் அந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருவை கலைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இருவரும் முன்பு போலவே உல்லாசமாக இருந்தனர். அதனால் அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். இது குறித்து அந்த பெண் தனது தாயிடம் கூறிஉள்ளார்.
இதனை அறிந்த தமிழரசன், அவரது தாய் பரமேஸ்வரி, நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் தமிழரசனின் காதலியிடம் முதலில் கர்ப்பத்தை கலைத்து விட்டு ஓரிரு வாரத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதனை நம்பிய அந்த பெண் கருவை கலைக்க சம்மதித்ததால் கருவை கலைத்துள்ளனர்.
அதன் பிறகு அந்த பெண்ணை சந்திப்பதை தமிழரசன் தவிர்த்தார். அதனால் வீட்டுக்கு சென்று கேட்ட போது திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷியாமளா, இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் தமிழரசன், அவரது தாய் பரமேஸ்வரி, அவரது நண்பர் சதீஷ்குமார், கருக்கலைப்பு செய்த டாக்டர்மதன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வில்லியனூர் அருகே உள்ள சிவராந்தகம் பேட்டையை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 27). பி.டெக். பட்டதாரி.
இவர் மாநில இளைஞர் காங்கிரஸ் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் நெருங்கி பழகி வந்ததால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். வீட்டுக்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் அந்த பெண்ணை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருவை கலைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இருவரும் முன்பு போலவே உல்லாசமாக இருந்தனர். அதனால் அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆனார். இது குறித்து அந்த பெண் தனது தாயிடம் கூறிஉள்ளார்.
இதனை அறிந்த தமிழரசன், அவரது தாய் பரமேஸ்வரி, நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் தமிழரசனின் காதலியிடம் முதலில் கர்ப்பத்தை கலைத்து விட்டு ஓரிரு வாரத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதனை நம்பிய அந்த பெண் கருவை கலைக்க சம்மதித்ததால் கருவை கலைத்துள்ளனர்.
அதன் பிறகு அந்த பெண்ணை சந்திப்பதை தமிழரசன் தவிர்த்தார். அதனால் வீட்டுக்கு சென்று கேட்ட போது திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷியாமளா, இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் தமிழரசன், அவரது தாய் பரமேஸ்வரி, அவரது நண்பர் சதீஷ்குமார், கருக்கலைப்பு செய்த டாக்டர்மதன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X