என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை முதல் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் - கியாஸ் தட்டுப்பாடு அபாயம்
Byமாலை மலர்30 Jun 2019 4:22 AM GMT (Updated: 30 Jun 2019 4:22 AM GMT)
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் திட்டமிட்டபடி நாளை முதல் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கான பழைய டெண்டர் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே அனைத்து வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் கடந்த 20-ந் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் திட்டமிட்டபடி சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே எண்ணெய் நிறுவனங்களுடன் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 71 டேங்கர் லாரிகளுக்கு உடனடி அனுமதி தருவதாகவும், ஜூலை மாதத்தில் 55 டேங்கர் லாரிகளை எடுத்துக் கொள்கிறோம் என்றும், மீதம் உள்ள டேங்கர் லாரிகளை ஏற்பது பற்றி தெரிவிக்க மறுப்பதாகவும் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது:-
அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஆயில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் ஆயில் நிறுவனங்கள் இதுவரை எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். இதனால் 4500 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்படும்.
இதனால் தென் மண்டலத்திற்கு உட்பட்ட இந்த 6 மாநிலங்களிலும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும். இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆயில் நிறுவனங்கள் சார்பில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களில் இருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) சமையல் கியாசை கொண்டு செல்லும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கான பழைய டெண்டர் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே அனைத்து வாகனங்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் கடந்த 20-ந் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு வேலை நிறுத்தம் தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் திட்டமிட்டபடி சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கும் என தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே எண்ணெய் நிறுவனங்களுடன் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 71 டேங்கர் லாரிகளுக்கு உடனடி அனுமதி தருவதாகவும், ஜூலை மாதத்தில் 55 டேங்கர் லாரிகளை எடுத்துக் கொள்கிறோம் என்றும், மீதம் உள்ள டேங்கர் லாரிகளை ஏற்பது பற்றி தெரிவிக்க மறுப்பதாகவும் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் கூறியதாவது:-
அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஆயில் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் ஆயில் நிறுவனங்கள் இதுவரை எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். இதனால் 4500 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்படும்.
தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 4500 டேங்கர் லாரிகள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை டேங்கர் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்படும்.
இதனால் தென் மண்டலத்திற்கு உட்பட்ட இந்த 6 மாநிலங்களிலும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும். இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆயில் நிறுவனங்கள் சார்பில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X