search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரூரில், நாளை தி.மு.க. பொதுக்கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
    X

    போரூரில், நாளை தி.மு.க. பொதுக்கூட்டம் - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

    போரூரில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாளை நடக்கவுள்ள திமுக பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்டம், மதுரவாயல், தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் போரூர் சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் அமைந்துள்ள கலைஞர் திடலில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் காரம்பாக்கம் க.கணபதி தலைமையில் நடக்கிறது.

    இதில் நடிகரும், முரசொலி மேலாண்மை இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஈரோடு இறைவன், கு.க. செல்வம், எம்.கே. மோகன், எம்.டி.ஆர். நாதன், ஆர்.என்.துரை, வெல்டிங் மணி, ஐ.கென்னடி, செல்வி சவுந்தர்ராஜன், நெளம்பூர் வே.ராஜன், ஆலப்பாக்கம் கு.சண்முகம், ந.ராமலிங்கம், மதன்மோகன், ஏ.ஆர்பி.எம். காமராஜ், மயிலை வேலு, கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மா.பா. அன்புதுரை, ச.பரமசிவம், பால்பாண்டியன், நந்தனம் மதி, ஜெ.எஸ். அகஸ்டின்பாபு, வட்ட செயலாளர்கள் என். அருணாசலம், சோ. ராமலிங்கம், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரம்பாக்கம் க.கணபதி செய்துள்ளார்.
    Next Story
    ×