search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வேண்டி மதுரையில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை
    X

    மழை வேண்டி மதுரையில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை

    தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மழை வேண்டி நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
    மதுரை:

    தமிழ்நாட்டை கடந்த ஆண்டு கைவிட்ட பருவமழை இந்த ஆண்டும் போதிய அளவு கைகொடுக்குமா? என்ற ஏக்கம் மக்கள் மனதில் குடிகொண்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் தண்ணீருக்காக மக்கள் இரவு-பகலாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சமீபத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்தப்பட்டன. இதேபோல், பிறமதத்தினரும் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



    அவ்வகையில், மதுரை மாவட்டத்தில் அன்னவாசல் அருகே மழை வேண்டி நேற்று நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மக்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்தினர்.
    Next Story
    ×