என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போர்வெல்களில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு - லாரிகளை சிறைபிடித்து பொது மக்கள் போராட்டம்
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், பிடாரிதாங்கல் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜெனரேட்டர் வசதியுடன் தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது.
நேற்று இரவு ஏராளமான லாரிகள் தண்ணீர் ஏற்றுவதற்காக அங்கு வந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து லாரிகளை சிறை பிடித்து வைத்திருந்த பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த பகுதியில் லாரிகளில் தண்ணீர் எடுக்க தடை விதித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது 60 அடியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது 300 அடி முதல் 600 அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு போர்வெல்கள் அமைத்து நூற்றுக்கணக்கான லாரிகளில் தண்ணீர் திருடி எடுத்து செல்லப்படுகிறது. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்