என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் கலெக்டர் மீது ஜோதிமணி எம்.பி. புகார்
Byமாலை மலர்24 Jun 2019 3:09 AM GMT (Updated: 24 Jun 2019 3:09 AM GMT)
எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார் என்று கரூர் கலெக்டர் மீது ஜோதிமணி எம்.பி. பரபரப்பு புகார் கூறினார்.
கரூர்:
கரூரில் எம்.பி.ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதுமே குடிநீர் பிரச்சினை இருக்கிறது. நீண்ட நாட்களாக குடிநீர் சம்பந்தமான பணிகளை சரிவர மேற்கொள்ளாததே இதற்கான காரணம் ஆகும். கரூரில் குடிநீர்திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. இது பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தை தட்டி கழிக்கும் போக்காக தான் தெரிகிறது.
தமிழகத்திலுள்ள தீவிரமான குடிநீர் பிரச்சினையை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அதற்கான தனி நிதியை மத்திய அரசானது மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், காவிரி பிரச்சினையிலும் உரிய தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். தண்ணீர் பிரச்சினை என்பது பொதுப்பிரச்சினை. இது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசை சேர்ந்த அரசியல் பிரச்சினை அல்ல. எந்த கட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து பணியாற்ற கடமை பட்டவர்கள் தான் என்பதை உணர்ந்து ஆய்வு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, ‘எம்.பி. ஜோதிமணியின் செல்போன் எண்ணை பிளாக் செய்யவில்லை’ என்றார்.
கரூரில் எம்.பி.ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதுமே குடிநீர் பிரச்சினை இருக்கிறது. நீண்ட நாட்களாக குடிநீர் சம்பந்தமான பணிகளை சரிவர மேற்கொள்ளாததே இதற்கான காரணம் ஆகும். கரூரில் குடிநீர்திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. இது பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தை தட்டி கழிக்கும் போக்காக தான் தெரிகிறது.
மேலும் தொகுதிகளிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையையொட்டி எனது செல்போன் நம்பரை, கலெக்டர் “கால் பிளாக்” செய்தார். நான் பாராளுமன்ற உறுப்பினரானதும் அதனை எடுத்து விட்டிருப்பார் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கால் பிளாக்கில் வைத்துள்ளார். இப்படி இருந்தால் பொதுமக்கள் கூறும் கோரிக்கைகளை எப்படி முன் வைப்பது? எனவே இனியாவது இதனை மாற்றி கொள்ள வேண்டும்.
தமிழகத்திலுள்ள தீவிரமான குடிநீர் பிரச்சினையை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அதற்கான தனி நிதியை மத்திய அரசானது மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், காவிரி பிரச்சினையிலும் உரிய தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். தண்ணீர் பிரச்சினை என்பது பொதுப்பிரச்சினை. இது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசை சேர்ந்த அரசியல் பிரச்சினை அல்ல. எந்த கட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து பணியாற்ற கடமை பட்டவர்கள் தான் என்பதை உணர்ந்து ஆய்வு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, ‘எம்.பி. ஜோதிமணியின் செல்போன் எண்ணை பிளாக் செய்யவில்லை’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X