என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வள்ளியூர் அருகே கம்ப்யூட்டர்கள் செயல்படாததால் ஆசிரியர் தேர்வில் சிக்கல்
நெல்லை:
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 834 கம்ப்யூட்டர் ஆசிரியர் பதவிகள் காலியாக உள்ளன. இதை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக இன்று தேர்வு நடை பெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டர் மற்றும் பல்வேறு தனியார் கல்லூரிகளில் தேர்வு நடைபெற்றது.
இதில் வள்ளியூர் அருகே உள்ள ஒரு கல்லூரியில் தேர்வு எழுத 30 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் தேர்வு எழுதியபோது ஆன்லைன் குளறுபடியால் தேர்வு எழுத முடியாமல் சிக்கல் உருவானது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர்கள் கூறியவற்றின் படி, புதிய மென்பொருள் போடப்பட்டு காலதாமதமாக தேர்வு தொடங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கான வேலைகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்