search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்- பெண் புகார்
    X

    திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்- பெண் புகார்

    திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், பேரையூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பெரிய சிட்டிலொட்டிபட்டியைச் சேர்ந்த பெண் பேரையூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-

    நான் டி.கல்லுப்பட்டியில் ஸ்டுடியோவில் வேலை பார்த்தபோது அந்தப்பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் அபிஷேக் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அதன் பிறகு நான் சென்னை சென்று வக்கீல் ஒருவரிடம் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். அங்கு அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் அபிஷேக் வந்தார். அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனால் நான் கர்ப்பமானேன். இதனை அபிஷேக்கிடம் கூறியபோது, கர்ப்பத்தை கலைக்குமாறு கூறினார். அதனால் கர்ப்பத்தை கலைத்தேன்.

    இருப்பினும் திருமணத் திற்கு அபிஷேக் மறுத்தார். அவரது வீட்டில் சென்று பேசியபோது மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி அபிஷேக், அவரது தந்தை நாகராஜ், தாய் ஜானகி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×