search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் விடுதியில் விபசாரம்- பெண் புரோக்கர் கைது
    X

    நாகர்கோவிலில் விடுதியில் விபசாரம்- பெண் புரோக்கர் கைது

    நாகர்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அனந்தன் பாலத்தில் இருந்து தம்மத்துகோணம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த விடுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அந்த விடுதிக்கு வாலிபர்கள் சென்று வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஒரு அறை முன்பு நின்ற வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினார்.

    போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அந்த அறையை சோதனை செய்தபோது அதில் 2 பெண்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரும், பெங்களூருவை சேர்ந்த பெண்ணும் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பெண் விபசார புரோக்கர் ஒருவர் அவர்களை ஆசை வார்த்தை கூறி நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    போலீசார் அந்த பெண் புரோக்கரை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்களை மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரணைக்கு பின்னர் பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    தலைமறைவான விடுதி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×