search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்- கி.வீரமணி வலியுறுத்தல்
    X

    குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்- கி.வீரமணி வலியுறுத்தல்

    தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘‘தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தையோ அல்லது சட்டமன்றத்தையோ கூட்டி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிற வகையில் செயல்பட வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் இதில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். பணம் கொடுத்தும் நல்ல தண்ணீரை கூட மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. தமிழகம் இதுவரை இது போன்ற வறட்சியை சந்தித்ததில்லை. இதில் அரசியல் பார்க்காமல், பொது பிரச்சனையாக கருதி மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும்.’’

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×