என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து ரூ.15 கோடி சந்தன மரம் கடத்தல்
Byமாலை மலர்15 Jun 2019 12:08 PM GMT (Updated: 15 Jun 2019 12:08 PM GMT)
உடுமலை அருகே 5 ஆண்டுகளாக பழைய டயர்களில் மறைத்து ரூ.15 கோடி சந்தன மரம் கடத்தியது தொடர்பாக அந்த கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை:
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சொயாப் என்ற குஞ்சப்பு (வயது 36). இவர் உடுமலை அருகே உள்ள தமிழக- கேரள எல்லையான இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15 கோடி சந்தன கட்டைகளை கடத்தியதாக மறையூர் வனத்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
குஞ்சப்பு சந்தனமரத்தை வெட்டுவதற்கு 6 பேரை வேலைக்கு அமர்த்தி கும்பல் தலைவனாக செயல்பட்டுள்ளார். வெட்டிய சந்தன மரங்களை துண்டுகளாக்கி சொகுசு காரில் ரகசிய அறை அமைத்து அதில் வைத்து கடத்தி மலப்புரத்தில் ஒரு குடோனில் பதுக்கி வைப்பார்.
2 ஆயிரம் கிலோ வரை சேர்ந்ததும் தமிழக பதிவு எண் கொண்ட லாரியில் சந்தன கட்டைகளை பழைய லாரி டயர்களில் மறைத்து ஆந்திராவில் உள்ள சந்தன ஆயில் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15 கோடி சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று வனத்துறையினர் கூறினர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் சொயாப் என்ற குஞ்சப்பு (வயது 36). இவர் உடுமலை அருகே உள்ள தமிழக- கேரள எல்லையான இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15 கோடி சந்தன கட்டைகளை கடத்தியதாக மறையூர் வனத்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
குஞ்சப்பு சந்தனமரத்தை வெட்டுவதற்கு 6 பேரை வேலைக்கு அமர்த்தி கும்பல் தலைவனாக செயல்பட்டுள்ளார். வெட்டிய சந்தன மரங்களை துண்டுகளாக்கி சொகுசு காரில் ரகசிய அறை அமைத்து அதில் வைத்து கடத்தி மலப்புரத்தில் ஒரு குடோனில் பதுக்கி வைப்பார்.
2 ஆயிரம் கிலோ வரை சேர்ந்ததும் தமிழக பதிவு எண் கொண்ட லாரியில் சந்தன கட்டைகளை பழைய லாரி டயர்களில் மறைத்து ஆந்திராவில் உள்ள சந்தன ஆயில் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளில் ரூ.15 கோடி சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று வனத்துறையினர் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X