என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி அருகே பிரிட்ஜில் இருந்த நாகப்பாம்பு
Byமாலை மலர்15 Jun 2019 6:36 AM GMT (Updated: 15 Jun 2019 6:36 AM GMT)
போச்சம்பள்ளி அருகே பிரிட்ஜின் பின்புறத்தில் நாகப்பாம்பு பதுங்கி இருந்த சம்பவத்தை அறிந்த அந்த பகுதியினர் பெரும் பீதியுடன் உள்ளனர்.
போச்சம்பள்ளி:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று வரையும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏர்கூலர் மற்றும் ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் போன்ற மின்சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இத்தகைய குளிரூட்டக்கூடிய மின்சாதனங்களில் பாம்பு புகுந்து வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 35). ராணுவ வீரரான இவர் தனது வீட்டில் பிரிட்ஜ் வைத்து பயன்படுத்தி வந்தார். இன்று காலை இவரது பிரிட்ஜின் பின்புறத்தில் புஸ் புஸ் என சத்தம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அசோக்குமார் பிரிட்ஜின் பின்புறத்தில் பார்த்தபோது, அங்கு 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அசோக்குமார் அவரது நண்பர் நாராயணசாமி என்பவருக்கு தகவல் தெரிவித்து அழைத்து வந்தார்.
பின்னர் அவர், பிரிட்ஜின் பின்புறத்தில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்தார். இதனை அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் உயிருடன் விட்டனர். பிரிட்ஜில் பாம்பு இருந்த சம்பவத்தை கேட்ட அந்த பகுதியினர் பெரும் பீதியுடன் உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று வரையும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏர்கூலர் மற்றும் ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் போன்ற மின்சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இத்தகைய குளிரூட்டக்கூடிய மின்சாதனங்களில் பாம்பு புகுந்து வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 35). ராணுவ வீரரான இவர் தனது வீட்டில் பிரிட்ஜ் வைத்து பயன்படுத்தி வந்தார். இன்று காலை இவரது பிரிட்ஜின் பின்புறத்தில் புஸ் புஸ் என சத்தம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அசோக்குமார் பிரிட்ஜின் பின்புறத்தில் பார்த்தபோது, அங்கு 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அசோக்குமார் அவரது நண்பர் நாராயணசாமி என்பவருக்கு தகவல் தெரிவித்து அழைத்து வந்தார்.
பின்னர் அவர், பிரிட்ஜின் பின்புறத்தில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்தார். இதனை அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் உயிருடன் விட்டனர். பிரிட்ஜில் பாம்பு இருந்த சம்பவத்தை கேட்ட அந்த பகுதியினர் பெரும் பீதியுடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X