என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐ.டி. ஊழியர் பலி
கொடைரோடு, ஜூன். 15-
திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஐ.டி. ஊழியர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்துக்குடியைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவா (வயது 28). இவர் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் கோவை கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்த திவின் குமார் (27). கோவில்பட்டி குளத்து பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் மகள் கோமதி (26). இவர்கள் 3 பேரும் நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் வந்தனர்.
பின்னர் மீண்டும் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3½ மணி அளவில் கார் கொடைரோடு அடுத்து வந்து கொண்டு இருந்த போது பள்ளப்பட்டியில் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த மரத்தில் மோதியது.
இதில் காரில் வந்த சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மற்ற 2 பேரும் படுகாயமடைந் தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யாதலைமையில் போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சிவாவின் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப் பட்டுள்ளது. * * * ஐ.டி. நிறுவன ஊழியர் சிவா காருக்குள் பிணமாக கிடக்கும் காட்சி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்