search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.டி. நிறுவன ஊழியர் சிவா காருக்குள் பிணமாக கிடக்கும் காட்சி.
    X
    ஐ.டி. நிறுவன ஊழியர் சிவா காருக்குள் பிணமாக கிடக்கும் காட்சி.

    திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐ.டி. ஊழியர் பலி

    திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு, ஜூன். 15-

    திண்டுக்கல் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஐ.டி. ஊழியர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்துக்குடியைச் சேர்ந்த கருப்பையா மகன் சிவா (வயது 28). இவர் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் கோவை கிருஷ்ணசாமி நகரைச் சேர்ந்த திவின் குமார் (27). கோவில்பட்டி குளத்து பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் மகள் கோமதி (26). இவர்கள் 3 பேரும் நண்பர் வீட்டு விசே‌ஷத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் வந்தனர்.

    பின்னர் மீண்டும் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3½ மணி அளவில் கார் கொடைரோடு அடுத்து வந்து கொண்டு இருந்த போது பள்ளப்பட்டியில் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த மரத்தில் மோதியது.

    இதில் காரில் வந்த சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மற்ற 2 பேரும் படுகாயமடைந் தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யாதலைமையில் போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சிவாவின் உடல் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப் பட்டுள்ளது. * * * ஐ.டி. நிறுவன ஊழியர் சிவா காருக்குள் பிணமாக கிடக்கும் காட்சி.

    Next Story
    ×