என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாடிவயல் அருகே நள்ளிரவில் ஒற்றை யானை தாக்கி பெண் பலி
கோவை:
கோவை சாடிவயல் அருகே உள்ள போட்டபதி மலை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி நஞ்சம்மாள் (வயது 60). கூலித் தொழிலாளி.
இவர் நள்ளிரவு 1.30 மணியளவில் உடல் உபாதை கழிப்பதற்காக வெளியே வந்தார். அங்கு இருட்டில் நின்று கொண்டு இருந்த ஒற்றை யானை நஞ்சம்மாளை பார்த்ததும் ஆக்ரோசம் அடைந்து விரட்டியது. இதனை பார்த்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
விடாது பின் தொடர்ந்து சென்ற யானை தனது துதிக்கையால் நஞ்சம்மாளை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினார். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரடடினர்.
பின்னர் யானை தூக்கி வீசியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நஞ்சம்மாளை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலயே நஞ்சம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்