என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ்சில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் ஒப்படைத்த டிரைவர் - கண்டக்டர்
Byமாலை மலர்14 Jun 2019 10:28 AM GMT (Updated: 14 Jun 2019 10:28 AM GMT)
திருப்பூரில் பஸ்சில் தவறவிட்ட பணத்தை பயணியிடம் டிரைவர், கண்டக்டர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பஸ்சை திருப்பூரை சேர்ந்த டிரைவர் துரைசாமி என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக செந்தில்குமார் என்பவர் இருந்தார். பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது பஸ்சின் முன் இருக்கையில் ஒரு கைப்பை அனாதையாக இருப்பதை 2 பேரும் பார்த்தனர்.
இதில் பணம், ஏ.டி.எம். கார்டு, ஆதார் அட்டை ஆகியவை இருந்தது. பின்னர் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் போலீஸ் நிலையம், டெப்போ ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் ரூ. 11 ஆயிரத்து 610 ரொக்க பணம், ஏ.டிஎம்.கார்டு, ஆதார் கார்டு, சில ரசீதுகளும் இருந்தது.
மேலும் இந்த தகவல் டிரைவர், கண்டக்டர் புகைப்படம் மற்றும் செல்போன் நம்பருடன் சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது.
இதனை பார்த்த ஒரு பெண் டிரைவர், கண்டக்டருக்கு போன் செய்தார். அப்போது அவர் தான் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த நலா எனவும், அது தன்னுடைய கைப்பை எனவும் தெரிவித்தார்.
உடனடியாக அந்த பெண்ணை திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைப்பையை தவற விட்ட நலாவிடம் ஒப்படைத்தனர்.
டிரைவர், கண்டக்டரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பஸ்சை திருப்பூரை சேர்ந்த டிரைவர் துரைசாமி என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக செந்தில்குமார் என்பவர் இருந்தார். பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அப்போது பஸ்சின் முன் இருக்கையில் ஒரு கைப்பை அனாதையாக இருப்பதை 2 பேரும் பார்த்தனர்.
இதில் பணம், ஏ.டி.எம். கார்டு, ஆதார் அட்டை ஆகியவை இருந்தது. பின்னர் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் போலீஸ் நிலையம், டெப்போ ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து கைப்பையை திறந்து பார்த்தனர். அதில் ரூ. 11 ஆயிரத்து 610 ரொக்க பணம், ஏ.டிஎம்.கார்டு, ஆதார் கார்டு, சில ரசீதுகளும் இருந்தது.
மேலும் இந்த தகவல் டிரைவர், கண்டக்டர் புகைப்படம் மற்றும் செல்போன் நம்பருடன் சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது.
இதனை பார்த்த ஒரு பெண் டிரைவர், கண்டக்டருக்கு போன் செய்தார். அப்போது அவர் தான் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த நலா எனவும், அது தன்னுடைய கைப்பை எனவும் தெரிவித்தார்.
உடனடியாக அந்த பெண்ணை திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைப்பையை தவற விட்ட நலாவிடம் ஒப்படைத்தனர்.
டிரைவர், கண்டக்டரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X