search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குருந்தன்கோடு அருகே மனைவியின் தங்கையை கர்ப்பிணி ஆக்கிய வாலிபர் கைது
    X

    குருந்தன்கோடு அருகே மனைவியின் தங்கையை கர்ப்பிணி ஆக்கிய வாலிபர் கைது

    குருந்தன்கோடு அருகே மனைவியின் 16 வயது தங்கையை கர்ப்பிணி ஆக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குளச்சல்:

    வெள்ளிச்சந்தையை அடுத்த குருந்தன்கோடு, இந்திரா காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 27). கூலி தொழிலாளி. அய்யப்பனுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மனைவிக்கு 16 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். அவர் அடிக்கடி அக்கா வீட்டிற்கு வருவது வழக்கம்.

    அப்போதுஅக்காளின் கணவர் அய்யப்பனுடனும் சகஜமாக பழகினார். கடந்த சில வாரங்களாக 16 வயது சிறுமி, அக்கா வீட்டிற்கு வருவதில்லை. ஏன் என்று கேட்டால் காரணமும் கூறவில்லை.

    இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் தாயார் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.

    இது பற்றி டாக்டர்கள் சிறுமியின் பெற்றோரிடம் கூறியதும், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கர்ப்பத்துக்கு யார்? காரணம் என அவர்கள் சிறுமியிடம் கேட்டனர்.

    மேலும் இந்த சம்பவம் பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று போலீசார் விசாரித்தனர். இதில் சிறுமி, அக்காவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு அக்காவின் கணவர், சிறுமியை கற்பழித்தது தெரியவந்தது.

    இதையடுத்து அக்காவின் கணவர் அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் இரணியலை அடுத்த ஆளூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நெல்லை மாவட்டம் பணக்குடியில் இருந்து ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்களுடன் 9 வயது சிறுமியும் இருந்தார்.

    அந்த சிறுமி சம்பவதன்று தின்பண்டம் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வரும் போது அவர் அழுது கொண்டே வந்தார். இது பற்றி பெற்றோர் கேட்டபோது வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இது பற்றி பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×