என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரபிக்கடலில் வாயு புயல்- குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Byமாலை மலர்11 Jun 2019 5:09 AM GMT (Updated: 11 Jun 2019 5:09 AM GMT)
அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாகர்கோவில்:
கேரளாவையொட்டி அரபிக்கடலில் வாயு புயல் உருவாகி உள்ளது.
அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்ட கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 13-ந்தேதி வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதுபோல கடலில் 3.5 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. என்றாலும் மீனவர்கள் கட்டுமரம், வள்ளங்களில் சென்று மீன்பிடிப்பது வழக்கம்.
கடலில் கொந்தளிப்பும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்பதால் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இருந்து மீனவர்கள் யாரும் கட்டுமரம், வள்ளங்களில் கடலுக்கு செல்லக்கூடாது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் எச்சரிக்கை அறிவிப்பு கடலோர கிராம பங்கு தந்தையர் மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவையொட்டி அரபிக்கடலில் வாயு புயல் உருவாகி உள்ளது.
அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்ட கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 13-ந்தேதி வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதுபோல கடலில் 3.5 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. என்றாலும் மீனவர்கள் கட்டுமரம், வள்ளங்களில் சென்று மீன்பிடிப்பது வழக்கம்.
கடலில் கொந்தளிப்பும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்பதால் குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இருந்து மீனவர்கள் யாரும் கட்டுமரம், வள்ளங்களில் கடலுக்கு செல்லக்கூடாது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் எச்சரிக்கை அறிவிப்பு கடலோர கிராம பங்கு தந்தையர் மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X