search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காளிபேட்டையில் சேலம் - சென்னை 8 வழி சாலை எதிர்ப்பு குழுவினர், எடப்பாடி அரசும் மோடி அரசும் 8 வழி சாலைக்கு மேல் முறையீடு செய்ததை கண்டித்துகருப்புகொடிஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாயி கிருஷ்ண மூர்த்தி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாடு முழுவதும் குடிநீர் பஞ்சத்தில் தள்ளாடும் நிலைமையை சரி செய்ய முடியாத அரசு விவசாய நிலங்களை அழித்து அதில் சாலை போடும் பணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது மேலும் ஏற்கனவே இருக்கும் சேலம் - சென்னைக்கு மூன்று பாதைகள் உள்ளது. அதனை சரி செய்ய இயலாமல் இருக்கும் அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்து அதில் எட்டு வழி சாலை போடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×