என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
எங்கள் உயிரே போனாலும் மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்- பிஆர் பாண்டியன் பேட்டி
ஓசூர்:
ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது வரை காவிரி நீர்பாசன ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணி செல்ல திட்டமிட்டு இன்று புறப்பட்டனர். அவர்களை பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவிரி நீர்பாசன ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் உயிரே போனாலும் மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராசி மணலில் புதிய அணையை ஒன்று கட்ட வேண்டும். அதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராசி மணலில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு ஒத்துழைப்பும், மத்திய அரசு அனுமதியும் வழங்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து விவசாயம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும். இதனால் 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்க மாட்டோம்.
அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. தமிழக மக்கள் உரிமைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #prpandian #mekadatudam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்