என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
90 வயது மூதாட்டியை ஒகேனக்கல்லில் விட்டு சென்ற உறவினர்கள்
Byமாலை மலர்28 Sep 2018 10:52 AM GMT (Updated: 28 Sep 2018 10:52 AM GMT)
ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் 90 வயது மூதாட்டியை உறவினர்கள் விட்டு சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 90). இவர் வீட்டில் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி ஒரு ஆட்டோவில் இவரை பேரன் சிவராஜ், அவரது மனைவி உஷா ஆகியோர் பென்னாகரத்தை அடுத்த நல்லாம்பட்டிக்கு அழைத்து வந்தனர். ஆனால் கட்டு போடாமால் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர்.
கடந்த 10 நாட்களாக அங்கு தவித்து வரும் மூதாட்டி வெங்கட்டம்மாளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் உணவு வாங்கி கொடுக்கிறார்கள்.
இந்த மூதாட்டி குறித்து ஒகேனக்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அந்த மூதாட்டியை அவர்கள் அழைத்து செல்லாவிட்டால் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இது குறித்து மூதாட்டி வெங்கட்டம்மாள் கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு எனது 2 மகன்களும் இறந்தனர். இதனால் எனது மகள் முனிரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கு 2 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி என்னை பேரனும், பேத்தியும் அழைத்து வந்து ஒகேனக்கல்லில் விட்டு சென்றுவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 90). இவர் வீட்டில் தவறி விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி ஒரு ஆட்டோவில் இவரை பேரன் சிவராஜ், அவரது மனைவி உஷா ஆகியோர் பென்னாகரத்தை அடுத்த நல்லாம்பட்டிக்கு அழைத்து வந்தனர். ஆனால் கட்டு போடாமால் ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றுவிட்டனர்.
கடந்த 10 நாட்களாக அங்கு தவித்து வரும் மூதாட்டி வெங்கட்டம்மாளுக்கு சுற்றுலா வரும் பயணிகள் உணவு வாங்கி கொடுக்கிறார்கள்.
இந்த மூதாட்டி குறித்து ஒகேனக்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மூதாட்டியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அந்த மூதாட்டியை அவர்கள் அழைத்து செல்லாவிட்டால் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இது குறித்து மூதாட்டி வெங்கட்டம்மாள் கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு எனது 2 மகன்களும் இறந்தனர். இதனால் எனது மகள் முனிரத்தினம் வீட்டில் தங்கி இருந்தேன். அங்கு 2 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் காலில் அடிபட்டது. கட்டு போடுவதாக கூறி என்னை பேரனும், பேத்தியும் அழைத்து வந்து ஒகேனக்கல்லில் விட்டு சென்றுவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X