என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சி வாரசந்தையில் இன்று ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Byமாலை மலர்17 Aug 2018 9:57 AM GMT (Updated: 17 Aug 2018 9:57 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை விற்பனைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வார்கள்.
இந்த சந்தையில் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்படும். இன்று வெள்ளிக்கிழமை சந்தை கூடியது. வருகிற 22-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று அதிகாலை முதலே விவசாயிகள் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். மேலும் வியாபாரிகள் சிலர் வெளியூர்களில் இருந்து ஆடுகளை வாங்கி, இங்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்தனர்.
இதனால் சந்தை முழுவதும் ஆடுகளாக காணப்பட்டது. இதனால் ஆடு விற்பனை சூடுபிடித்தது. ஆடுகளை வாங்க விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, புதுவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து குவிந்தனர்.
அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஒரு குட்டி ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நன்கு வளர்ச்சி அடைந்த ஆடுகள் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளை மொத்தமாக சில வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதுபோல் மாடுகளும் அதிக அளவில் விற்பனை ஆனது.
இன்று மட்டும் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன என ஆடு வியாபாரி ஒருவர் கூறினார்.
ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் அனைவரும் வேன்கள், மினி லாரிககளில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை விற்பனைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வார்கள்.
இந்த சந்தையில் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்படும். இன்று வெள்ளிக்கிழமை சந்தை கூடியது. வருகிற 22-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று அதிகாலை முதலே விவசாயிகள் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். மேலும் வியாபாரிகள் சிலர் வெளியூர்களில் இருந்து ஆடுகளை வாங்கி, இங்கு அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்தனர்.
இதனால் சந்தை முழுவதும் ஆடுகளாக காணப்பட்டது. இதனால் ஆடு விற்பனை சூடுபிடித்தது. ஆடுகளை வாங்க விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, புதுவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து குவிந்தனர்.
அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஒரு குட்டி ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நன்கு வளர்ச்சி அடைந்த ஆடுகள் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஆடுகளை மொத்தமாக சில வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதுபோல் மாடுகளும் அதிக அளவில் விற்பனை ஆனது.
இன்று மட்டும் 15 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன என ஆடு வியாபாரி ஒருவர் கூறினார்.
ஆடுகளை வாங்கிய வியாபாரிகள் அனைவரும் வேன்கள், மினி லாரிககளில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X