என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
கூடலூர்:
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேசன் அரிசியை சிலர் மொத்தமாக கொள்முதல் செய்து கேரளாவுக்கு ரகசியமாக கடத்துகின்றனர்.
கழுதைகள் மூலமும் தோட்ட தொழிலாளர்கள் மூலமும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. அதிகாரிகளின் தீவிர சோதனையால் அது கட்டுபடுத்தப்பட்டது. அதன் பின்பு அரசு பஸ்களில் கடத்தினர். போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்தியதால் சில நாட்கள் ரேசன் அரிசி கடத்தல் இல்லாமல் இருந்தது.
தற்போது மீண்டும் ரேசன் அரிசி கடத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் ரேசன் அரிசிகளை பதுக்கி சிலர் கேரளாவுக்கு கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் கண்ணணுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அதிகாரிகள் வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செடிகளுக்குள் 20 மூட்டைகள் கிடந்தது. அதனை கைப்பற்றி சோதனையிட்டதில் 500 கிலோ ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் வந்ததால் பதுக்கல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ரேசன் அரிசியை கைப்பற்றிய அதிகாரிகள் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்