search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட பெண் பிணமாக கிடக்கும் காட்சி.
    X
    கொலையுண்ட பெண் பிணமாக கிடக்கும் காட்சி.

    சேலம் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண் கொலை

    சேலம் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் மீனா(வயது 17).

    ஒரே மகள் என்பதால் பெற்றோர் மீனாவை பாசமாக வளர்த்து வந்தனர். பள்ளிப்படிப்பை படிக்க வேண்டி அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் மகளை சேர்த்து விட்டனர்.

    இந்த நிலையில் தான் மீனாவின் வாழ்க்கை சோகமாக மாறியது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தந்தை அழகேசன் திடீரென இறந்தார். இதனால் கஸ்தூரியும், மீனாவும் வாழ்க்கை எனும் கடலில் தத்தளித்தனர்.

    கூலி வேலை செய்து தனது மகளை கஸ்தூரி வளர்த்து வந்தார். ஆனால் மீனாவின் வாழ்க்கையில் மீண்டும் விதி விளையாடியது. தந்தை இறந்த நிலையில் சுமார் 1 வருடம் கழித்து தாய் கஸ்தூரியையும் இழந்தார். தாய் கஸ்தூரி திடீரென இறந்தது மேலும் அவரை வாட்டி வதைத்தது.

    இருந்தாலும் அழகேசனின் பெற்றோர் குப்புசாமி- தீர்த்தம்மாள் அரவணைப்பில் மீனா 7-ம் வகுப்பை எட்டினார். அதன் பிறகு அவரால் பள்ளி படிப்பை குடும்ப கஷ்டத்தின் காரணமாக தொடர முடியவில்லை.

    தாத்தா- பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த அவரது வாழ்க்கையில் மீண்டும் விதி விளையாடியது. அவருடைய தந்தையின் தம்பி வீரசாமியின் தொல்லை நாளுக்கு அதிகரித்தது.

    குப்புசாமி-தீர்த்தம்மாள் தம்பதியின் 2-வது மகன் தான் இந்த வீரசாமி (வயது 45). அவர் அடிக்கடி சில்மி‌ஷம் எனும் வி‌ஷத்தை அரங்கேற்றியதாக தெரிகிறது. இதனால் மீனா கதறி அழுதார். பயந்து போன மீனா தனது தாய் கஸ்தூரியின் சொந்த ஊரான மல்லூருக்கு சென்று அங்கு தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். அவர்கள் பேத்தியை நன்றாக வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாத்தா-பாட்டியை பார்க்க வேண்டி ஆசை ஆசையாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்தார். தாத்தா-பாட்டியை பார்க்க வந்த இடத்தில் மீண்டும் வீரசாமியின் தொந்தரவு அதிகரித்தது.

    இன்று காலையில் வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. கதவு பூட்டிக் கிடந்ததை கண்டு ஊர் மக்கள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டி பார்த்தனர். அங்கு மீனா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் வீட்டிற்குள் யாரும் இல்லை.

    அந்த நேரத்தில் தீர்த்தம்மாள் வீட்டின் பின்புறம் பாத்திரங்கள் கழுவி கொண்டிருந்தார். அவருக்கு தனது பேத்தி கொலை செய்யப்பட்டு வீட்டிற்குள் பிணமாக கிடக்கும் விசயம் தெரியவில்லை. பொதுமக்கள் கூறிய பிறகு தான் அவருக்கு தெரிந்தது.

    இந்த கொலை சம்பவம் குறித்து தீவட்டி பட்டி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் யார்? என்பது மர்மமாகவே இருக்கிறது.

    ஊர் மக்கள் அனைவரது சந்தேகமும் வீரசாமி மீது தான் உள்ளது. அவர் தான் கொலை செய்திருக்க கூடும் என பொதுமக்கள் கூறுகிறார்கள். போலீசாருக்கும் வீரசாமி மீது தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    விசாரணைக்கு பிறகு தான் மீனா பாலியல் பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு தகவல்கள் தெரியவரும். #Tamilnews
    Next Story
    ×