என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவிடைமருதூர் அருகே கோழிக்கறி சாப்பிட்ட சிறுமி பலி: 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
சுவாமிமலை:
திருவிடைமருதூர் அருகே வல்லக்குடியை சேர்ந்தவர் வேணி. இவரது மகள்கள் திவ்யா (வயது 9), அனுசுயா (வயது 10). இவர்களது பாட்டி லெட்சுமி (வயது 58).
இவர்கள் வீட்டில் நேற்று இரவு கோழிக்கறி சமைத்து குழம்பு வைத்து அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர். அப்போது அவர்களுக்கு திடீர் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை ஆடுதுறை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே சிறுமி திவ்யா பரிதாபமாக இறந்தார். இதைகண்ட அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். பின்னர் மற்ற 3 பேரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு லெட்சுமி, வேணி, சிறுமி அனுசுயா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த சிறுமி திவ்யா வல்லக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், கோழிக்கறி சாப்பிட்ட இவர்களுக்கு புட்பாய்சன் ஏற்பட்டதால் இது ரத்தத்தில் கலந்து உள்ளது என்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கோழிக்கறி சாப்பிட்டு சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்