என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற கோரி 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம்
Byமாலை மலர்30 Jan 2017 5:39 AM GMT (Updated: 30 Jan 2017 5:39 AM GMT)
அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற கோரி பிப்ரவரி 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர்-கோவை- ஈரோடு ஆகிய மாவட்டங்களின் விவசாயம் -குடிநீர் பிரச்சனைக்கு அவினாசி - அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி கடந்த ஆண்டு போராட்ட குழுவினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
12 நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி அரசாணை வெளியிட்டது.
இதனால் போராட்ட குழுவினர் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆரம்ப கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் திட்ட பணியை விரைவில் தொடங்க கோரி திருப்பூர் மாவட்ட விவசாயிகளும், போராட்ட குழுவினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிற பிப்ரவரி 19-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
ஆனாலும் இந்த திட்டம் அப்படியே இருப்பதால் அதை நினைவு கூறும் வகையில் வருகிற 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.
அவினாசியில் 19-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்-கோவை- ஈரோடு ஆகிய மாவட்டங்களின் விவசாயம் -குடிநீர் பிரச்சனைக்கு அவினாசி - அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி கடந்த ஆண்டு போராட்ட குழுவினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
12 நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி அரசாணை வெளியிட்டது.
இதனால் போராட்ட குழுவினர் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆரம்ப கட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் திட்ட பணியை விரைவில் தொடங்க கோரி திருப்பூர் மாவட்ட விவசாயிகளும், போராட்ட குழுவினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிற பிப்ரவரி 19-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
ஆனாலும் இந்த திட்டம் அப்படியே இருப்பதால் அதை நினைவு கூறும் வகையில் வருகிற 19-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.
அவினாசியில் 19-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X