என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் குகையில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
Byமாலை மலர்30 Dec 2016 4:20 AM GMT (Updated: 30 Dec 2016 4:20 AM GMT)
சேலம் குகை அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் குகை அருகில் உள்ள பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை இந்த மாணவி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கழிவறை பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயவேலு (வயது 30) என்பவர் மாணவியின் பின்னால் கழிவறை பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் மாணவியிடம் பாலியல் தொல்லை செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு கத்தினார். இதை கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்து சிறுமியை வாலிபரிடம் இருந்து மீட்டனர். பின்னர் வாலிபரை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பிறகு அந்த வாலிபர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை செய்த ஜெயவேலு மீது போக்சோ சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் குகை அருகில் உள்ள பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கருங்கல்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை இந்த மாணவி வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கழிவறை பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயவேலு (வயது 30) என்பவர் மாணவியின் பின்னால் கழிவறை பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் மாணவியிடம் பாலியல் தொல்லை செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு கத்தினார். இதை கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்து சிறுமியை வாலிபரிடம் இருந்து மீட்டனர். பின்னர் வாலிபரை அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பிறகு அந்த வாலிபர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை செய்த ஜெயவேலு மீது போக்சோ சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X