என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே ஒடிசாவை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Byமாலை மலர்4 Dec 2016 6:14 AM GMT (Updated: 4 Dec 2016 6:14 AM GMT)
கோவை அருகே மில்லில் கொத்தடிமையாக வேலை செய்த ஒடிசாவை சேர்ந்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சூலூர்:
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த மினகரியல் என்ற பெண் கந்தமால் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைதேகியிடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தனது மகள் கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளப்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பஞ்சாலையில் கொத்தடிமையாக இருந்து வருவதாகவும், எனவே மகளை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து கந்தமால் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைதேகி தலைமையில் போலீசார் சூலூருக்கு வந்தனர்.
பின்னர் சூலூர் போலீசார் உதவியுடன் பள்ளப்பாளையம் நூற்பாலைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது மில்லில் வேலை செய்த மினகரியல் மகள் உள்பட 5 குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமையாக வேலை செய்தது தெரிய வந்தது. 5 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.
பின்னர் சூலூர் போலீசாருடன் இணைந்து ஒடிசா போலீசார் 5 பேரையும் மீட்டு ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி சூலூர் போலீசாரும் விசாரணை நடத்தினர். இதில் சூலூரை சேர்ந்த ஒரு பெண், ஒடிசாவில் இருந்து 5 குழந்தை தொழிலாளர்களை வேலைக்காக சூலூருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் பஞ்சாலையில் அவர்கள் 5 பேரும் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த மினகரியல் என்ற பெண் கந்தமால் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைதேகியிடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தனது மகள் கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளப்பாளையம் பகுதியில் ஒரு தனியார் பஞ்சாலையில் கொத்தடிமையாக இருந்து வருவதாகவும், எனவே மகளை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து கந்தமால் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைதேகி தலைமையில் போலீசார் சூலூருக்கு வந்தனர்.
பின்னர் சூலூர் போலீசார் உதவியுடன் பள்ளப்பாளையம் நூற்பாலைக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது மில்லில் வேலை செய்த மினகரியல் மகள் உள்பட 5 குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமையாக வேலை செய்தது தெரிய வந்தது. 5 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.
பின்னர் சூலூர் போலீசாருடன் இணைந்து ஒடிசா போலீசார் 5 பேரையும் மீட்டு ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி சூலூர் போலீசாரும் விசாரணை நடத்தினர். இதில் சூலூரை சேர்ந்த ஒரு பெண், ஒடிசாவில் இருந்து 5 குழந்தை தொழிலாளர்களை வேலைக்காக சூலூருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் பஞ்சாலையில் அவர்கள் 5 பேரும் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X