search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலையில் வாகனங்களை திருடி விற்ற 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?- என்.ஐ.ஏ. விசாரணை
    X

    உடுமலையில் வாகனங்களை திருடி விற்ற 2 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?- என்.ஐ.ஏ. விசாரணை

    • கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவருடன் சதாம் உசேன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றுள்ளனர்.
    • இருவரும் வாடகைக்கு என சரக்கு வாகனங்களை பெற்றும், வாகனங்களை திருடியும் மோசடியாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பாண்டியர் சந்தையை சேர்ந்த ஜாபர் அலி(வயது43), அப்பாவு வீதியை சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகியோர் வாடகைக்கு என சரக்கு வாகனங்களை பெற்றும், வாகனங்களை திருடியும் மோசடியாக விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர்.

    இதில் கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவருடன் சதாம் உசேன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உடுமலை வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

    தற்போது வாகன திருட்டு வழக்கில் கைதான சதாம்உசேன், ஜாபர் அலி ஆகியோர் திருடிய வாகனங்களை பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்தார்களா? என போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×