search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈழ தமிழர்கள் 16 பேர் விடுவிப்பு- சீமான் நன்றி
    X

    ஈழ தமிழர்கள் 16 பேர் விடுவிப்பு- சீமான் நன்றி

    • நீண்ட நெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப் போராட்டம்.
    • தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்ட நெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப் போராட்டத்திற்கும், கருத்துப் பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப் பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன்.

    இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேபோல, இந்தியச் சட்டத்தின்படி தங்களை அகதிகளெனப் பதிவு செய்திருக்கும் ஏனைய ஈழச் சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்.

    Next Story
    ×